புவா பாலா மக்களின் மூன்று முக்கிய தீர்மானங்கள் என்ன? (காணொளி காட்சி)

>> Saturday, July 11, 2009

பாகங்கள் 1,2,3,4,5-ஐக் காண இணைப்பைச் சுட்டுங்கள் : இறுதிவரை லிம் குவான் எங் மக்களைச் சந்திக்கவில்லை! - காணொளி காட்சி

பாகம் 6


பாகம் 7


பாகம் 8


போராட்டம் தொடரும்..

Read more...

'கம்போங் புவா பாலா'வில் விசேசமுங்க...

>> Friday, July 3, 2009


நாளை (04/07/2009) சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இண்ட்ராஃப் வழக்கறிஞர் திரு.உதயகுமார் பினாங்கு புக்கிட் குளுகோரில் அமைந்துள்ள தமிழர்களின் பாரம்பரிய கிராமமான 'கம்போங் புவா பாலா' அல்லது 'தமிழ் செப்பரல்' என்றழைக்கப்படும் கிராமத்திற்கு வருகைப் புரியவுள்ளார்.

பினாங்கு மாநிலத்திலேயே மிகப் பழமையான தமிழர்களின் பாரம்பரியத்தை 200 ஆண்டுகளாக பறைச்சாற்றி வரும் இக்கிராமத்தை பாரம்பரிய மிக்க கிராமம் என பிரகடனப்படுத்தும் வகையில்,'கம்போங் புவா பாலா' மக்கள் நாளை அதிகாரப்பூர்வமாக கிராம வரவேற்பு வாசலை திறப்புவிழா செய்யவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் திரு.உதயகுமார் மற்றும் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் கலந்துகொண்டு அம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர். பினாங்கு மாநிலத்தில் தமிழர்களுக்கென எஞ்சியிருக்கும் ஒரே கிராமமான புவா பாலாவை காப்பாற்றும் முயற்சியாக இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது. அக்கிராம நிலத்திற்கு சொந்தகாரர்கள் அம்மக்களே என்பதற்கான ஆதாரங்கள் தெள்ளத் தெளிவாக இருந்தும், சட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றமடைந்த அம்மக்களுக்கு எஞ்சியிருக்கும் சில வழிகளில் இதுவும் ஒன்று.

தனி மனிதராகவோ அல்லது இயக்கங்களைப் பிரதிநிதித்தோ இந்நிகழ்வில் கலந்துகொண்டு புவா பாலா மக்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம். அதேவேளை பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 'புவா பாலா' கிராமத்தை மீட்டெடுக்க நியாயமான உதவிகளை செய்ய இயக்கங்கள் முன்வந்தால், அது நீதிக்கும் மனித உரிமைக்கும் மதிப்பளிப்பதற்கு சமமாகும்.

போராட்டம் தொடரும்...

Read more...

இறுதிவரை லிம் குவான் எங் மக்களைச் சந்திக்கவில்லை! - காணொளி காட்சி

கடந்த 30-ஆம் திகதி சூன் மாதம் மாலை நான்கிலிருந்து இரவு எட்டு மணிவரை இண்ட்ராஃபுடன் நடைப்பெற்ற கம்போங் புவா பாலா மக்களின் அமைதி மறியல் காணொளி காட்சி உங்கள் பார்வைக்கு...

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


பாகம் 5


மற்ற பாகங்கள் படிப்படியாக பதிவேற்றப்படும். இந்நிகழ்வில் மக்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு கொடுக்க வெகுநேரம் காந்திருந்தும், அவர் வர மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



இதற்கிடையில், சில நாட்களாகவே நாளிதழ்களிலும் சரி, இணையத்தளங்களிலும் சரி கம்போங் புவா பாலா விவகாரத்தைப் பற்றிய அரசியல்வாதிகளின் கருத்துகளும், வலைஞர்களின் கருத்துகளும் பொதுமக்களின் நலன்களைச் சார்ந்திராமல், ஆளாளுக்கு இவ்விடயத்தை 'Dollar and Cents' என்கிற ரீதியிலும், தனி மனித தாக்குதல்கள், குறைகூறல்கள் என்கிற ரீதியிலும் கொண்டுச் செல்வது மிகவும் வருத்தத்தையளிக்கிறது. யாராவது அங்குள்ள மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார்களா? அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டார்களா? பாதிக்கப்பட்டவர்களை விட்டுவிட்டு தேவையில்லாத விடயங்களைப் பெரிதுபடுத்துவதோடு மட்டுமல்லாது, வழக்கம்போல் உண்மைச் செய்தியிலிருந்து மக்களை திசைதிருப்புவது, கதையை திரித்துச் சொல்வது என்று தொடர்ந்து வருகிறது. இதன் காரணம், கணினியின் முன்பு அமர்ந்துகொண்டு தேநீரை சுவைத்துக் கொண்டே செய்திகளை வாசிப்பவர்களுக்கு முழு விவரங்கள் தெரிவதில்லை. அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சனைகளை மக்களின் முன்பு வைப்பதைவிட 'Dollar and Cents' என்கிற ரீதியில் குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதுதான் காரணம்.

அண்மையில் செய்தித்தாள்களிலும் இணையத்தளங்களிலும் 'இண்ட்ராஃப்' இயக்கத்தின் மீது கடுந்தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அனைத்திற்கும் அரசியல் காரணங்கள் என பலர் வசைப்பாடுகின்றனர். குறிப்பாக இன்றைய நாளிதழ்களை எடுத்துப் படித்துப் பாருங்கள். எங்காவது புவா பாலா மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு என அலசி ஆராயப்பட்டுள்ளதா? அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நியாயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளனவா? அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் ஏழை மக்களை நம் கண் முன்னேயே நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? சுவையாக செய்திகளைப் படித்து கருத்து கூறிக்கொண்டிருக்கிறீர்களா அல்லது களத்தில் இறங்கி உண்மையை உணர்ந்து அதற்கேற்ப ஏதேனும் நடவடிக்கைகளில் இறங்குகிறீர்களா?

இவர்களுக்கெல்லாம் ஓர் உண்மை தெரியவில்லை. இவ்விவகாரத்தில் 'இண்ட்ராஃப்' மட்டுமல்ல, ஜெரிட் என்றழைக்கப்படும் 'ஒடுக்கப்பட்ட மக்களின் வலையம்', சுவாராம் மனித உரிமைக் குழு, 'அலிரான்', மலேசிய சோசியலிச கட்சி என இன்னும் பிற அரசு சார்பற்ற இயக்கங்கள் போராடி வருகின்றன. காரணம், இவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். புவா பாலா மக்கள் எப்படி திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியும். மக்கள் கூட்டணியை இண்ட்ராஃப் எதிர்ப்பதற்கு முக்கிய காரணமே இதுதான். புவா பாலா கிராம நிலத்தை பாரிசான் அரசு 'கோப்பராசி பெகாவாய்-பெகாவாய் கானான் புலாவ் பினாங்'கிற்கு அம்மக்களுக்கே தெரியாமல் குறைந்த விலையில் விற்றது என்றால், பினாங்கு மக்கள் கூட்டணியோ அந்நிலத்தை அம்னோவுடன் தொடர்புகொண்ட 'நுஸ்மெட்ரோ வெஞ்சூர்ஸ்' எனும் மேம்பாட்டாளருக்கு விற்க அனுமதியளித்திருக்கிறது. லிம் குவான் எங்கின் வழக்கறிஞர்களில் ஒருவர் அந்நிலத்தை மேம்பாட்டாளருக்கு விற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட பொழுதும், லிம் அவரின் அறிவுரையைக் கேட்கவில்லை. எனவே, நியாயப்படி இப்பொழுது நடைப்பெறும் பிரச்சனைகளுக்கு லிம் குவான் எங் கண்டிப்பாக பொறுப்பேற்றாக வேண்டும்.

அதன் முதல் நடவடிக்கையாக அவர் மக்களை எப்பொழுதோ சந்தித்து விளக்கமளித்திருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. அவரைப் பார்க்கச் சென்ற மக்களையும் அவர் சந்திக்க மறுத்திருக்கிறார். இச்செயல் எதனைப் புலப்படுத்துகிறது. 'மலேசிய சோசியலிச கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருட்செல்வன் கூறியது போல, "கிராமத்தை உடைக்கும் நாள் வரும். அப்பொழுது தெரியும், மக்கள் கூட்டணி மக்கள் பக்கமா, அல்லது மேம்பாட்டாளர்கள் பக்கமா என்று. இவர்களின் சாயம் அன்று வெளுக்கும்!"

இந்நாட்டில் தமிழர்களுக்கென்று எத்தனையோ அரசு சார்பற்ற இயக்கங்கள் இயங்கிவருகின்றன. தமிழுக்காக போராடுகிறோம் என்கிறார்கள். அத்தமிழைப் பேசும் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்களைப் பாதுகாப்பதில் முயற்சிகள் எடுப்பதில்லை. இதுநாள்வரையில் எந்தவொரு தமிழர் இயக்கமும் இவ்விவகாரத்தில் இணைந்து தோள் கொடுக்க முன்வரவில்லை. வாய் கிழிய பேசவும் , அறிக்கை விடவும் நேரம் இருக்கிறது. ஆனால் களத்தில் இறங்குவதற்கு இந்நாள்வரை ஓர் இயக்கமும் முன்வரவில்லை.

புவா பாலா கிராமத்தை மீட்டெடுக்க இண்ட்ராஃப் முழு மூச்சாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தயவு செய்து களத்தில் இறங்கி உதவ நினைப்பவர்களையும் உங்கள் அறிக்கைச் சாணிகளால் அடிக்காதீர்கள். முடிந்தால் இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது. களத்தில் துணிந்து இறங்குங்கள்!

போராட்டம் தொடரும்...

Read more...

”புவா பாலா கிராமத்தை உடைக்கக்கூடாது!” - இண்ட்ராஃப் மனு

>> Wednesday, July 1, 2009

நேற்று 30/06/2009 காலை 10 மணியளவில் இண்ட்ராஃபினரும் புவா பாலா மக்களும் இணைந்து பினாங்கு மாநில அரசினிடம் மனு கொடுக்கச் சென்றுள்ளனர். திரு.வேதமூர்த்தியின் மகள் வைசுணவியும் புவா பாலா குழந்தைகளும் அம்மனுவை பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் அந்தரங்கச் செயலாளரிடம் ஒப்படைத்தனர். அந்நிகழ்வின் காணொளி காட்சி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அன்று மாலை 4 மணியளவில் நாடு தளுவிய அளவில் சனநாயக செயல் கட்சியின் மாநில தலைமை அலுவலகங்களின் முன்பு இண்ட்ராஃப் அமைதி மறியலில் இறங்கியது. ஈப்போ, பினாங்கு, சிரம்பான், பெட்டாலிங் செயா ஆகிய இடங்களில் சிறிய அளவில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அமைதி மறியலில் ஈடுபட்டனர். பினாங்கு கொம்தார் கட்டிடத்தின் கீழ்தளத்தில் புவா பாலா மக்களும் இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் திரளாகத் திரண்டு மாலை 4 தொடங்கி இரவு 8 மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வமைதி போராட்டம் நடைப்பெற்ற இடத்திற்கு இறுதிவரை பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கும், மூன்றாவது துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியும், பாதிக்கப்பட்ட பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சனீசுவர நேதாசி இராயர், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் மற்றும் பிற மக்கள் கூட்டணி இந்திய அரசியல் தலைவர்கள் யாரும் வருகைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்நிகழ்வின் காணொளி காட்சி அடுத்தப் பதிவில் வெளிவரும்..

பாகம் 1



பாகம் 2



பாகம் 3



அடுத்தப் பதிவில் மேலும் செய்திகள் விரிவாக..

போராட்டம் தொடரும்..

Read more...
© 2007-2009 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP